மத்திய போலீஸ் படையில் ஒரு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் எல்லைப் பாதுகாப்பு படையில் 2892 பணியிடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 26,506 இடங்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 23,906 பணியிடங்களும், எஸ்.எஸ்.பி.,யில் 18,643 பணியிடங்களும் இந்தோ திபத் படையில் 5,784 பணியிடங்களும், அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 7,328 பணியிடங்களும் காலியாக உள்ளன என்று கூறினார்.

இந்த பணியிடங்கள், பணி ஓய்வு, பணி விலகல் மற்றும் இறப்பு காரணமாக காலியாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் 60,210 காவலர் பணியிடங்களுக்கும், 2,534 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வு வாரியம் மூலமாகவும், 330 உதவி கமாடெண்ட் பதவிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணயம் மூலமும் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.